சமீபத்தில் வெளியான 'காஞ்சனா 2' என்ற சூப்பர்ஹிட் படத்தில் நடித்த நடிகை டாப்சி, அடுத்து தன்னுடைய நடிப்பில் வெளியாகவிருக்கும் 'வை ராஜா வை' குறித்து பேட்டியளித்துள்ளார்.

'வை ராஜா வை' படத்தின் தன்னுடைய கேரக்டர் மிகவும் சில நிமிடங்களே வரக்கூடிய கேரக்டராக இருந்தாலும் மிகவும் வித்தியாசமான நான் இதுவரை செய்திராத கேரக்டராக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கேசினோ விளையாட்டு குறித்து எனக்கு சுத்தமாக எதுவுமே தெரியாது. உண்மையான கேசினோ விளையாட்டு குறித்து தெரிந்து கொள்ள நேரில் செல்லும் அளவுக்கு எனக்கு அந்த சமயத்தில் நேரம் இல்லை. இருப்பினும் இயக்குனர் எனக்கு அந்த விளையாட்டின் விதிகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். அவர் தான் எனக்கு கேசினோவை முழுவதுமாக கற்றுக் கொடுத்த டீச்சர்.

ஐஸ்வர்யா தனுஷ் ஒரு பெண்ணாக இருந்தாலும் ஒரு ஆண் இயக்குனரின் தலைமையின் கீழ் படப்பிடிப்பு நடப்பதுபோல்தான் படப்பிடிப்பு தளம் இருந்தது. அவரை மீறி படப்பிடிப்பில் எதுவும் நடந்திடாத அளவுக்கு படக்குழுவினர்களை தனது பிடியில் வைத்திருந்தார். அவருடன் பணிபுரிந்த சில நாட்கள் எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது.

இவ்வாறு டாப்சி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Post a Comment

 
Top