த்ரிஷா அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி கொண்டே போகிறார். சிம்பு, செல்வராகவன் இணையும் படத்தில் த்ரிஷாதான் நாயகியாக நடிப்பார் என்று செய்திகள் வெளியாகியது.

தற்போது இந்த தகவலை த்ரிஷா உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் டாப்சியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பது குறித்து த்ரிஷா டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, ஜீனியஸ் இயக்குனர் படத்தில் நடிக்க உள்ளதால் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்து வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
வாலு, இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா என்று தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்த படமும் வெளியாகவில்லை. தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது.

Post a Comment

 
Top