Hidden Camera Find  ஜவுளிக் கடைகள், லாட்ஜ்களில் ரகசிய கேமராக்களை பொருத்தி பெண்கள் உடை மாற்றுவது போன்ற காட்சிகளை படம் எடுக்கும் அநாகரிக செயல்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரங்கேவது மட்டுமல்லாமல்.. அதிகரித்தும் வருவது இன்றைய பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.

சில ஜவுளிக் கடைகளின் உடை மாற்றும் அறைகள், சில லாட்ஜ்களின் படுக்கை அறைகளில் ரகசிய கேமரா வைக்கப்படுகின்றன. இதில் பதிவாகும் காட்சிகளை சிலர் பார்த்து ரசிப்பதோடு, இணைய தளங்கள் வரை பதிவேற்றம் செய்யப்பட்டு அது சம்பந்தப்பட்ட பெண்ணின் அந்தரங்கங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இதனால்.. மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட பெண்களின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

உடை மாற்றும் அறை, குளியல் அறை, படுக்கை அறை போன்றவற்றில் மறைத்து வைக் கப்படும் ரகசிய கேமராக்கள் சிசிடிவி (கண்காணிப்பு கேமரா) போல பெரிய அளவில் இருக் காது. கண்ணுக்கு தெரியாத இடத்தில் மிக மிக சிறிய அளவில் பொருத்தப்பட்டிருக்கும். ஸ்குருவின் தலைப்பகுதி, கடிகாரம், பிளக் பாய்ன்ட், பிளக் ஹோல்டர், முகம்பார்க்கும் கண்ணாடியின் பின்புறம், குளிர்சாதன பெட்டி, கதவின் கைப்பிடி என எதிலும் இதைப் பொருத்தமுடியும். லாட்ஜ்களில் படுக்கை, குளிக்கும் இடம் ஆகியவற்றை நோக்கியுள்ள அனைத்து இடங்களையும் முதலில் கவனமாகப் பார்க்க வேண்டும். விளக்கை அணைத்த பிறகு, இருட்டாக உள்ள அறைகளில் படம் பிடிக்கக்கூடிய நவீன அகச்சிவப்பு கேமராக்களையும் இந்த அநாகரிக வேலைக்கு பயன்படுத்துகிறார்கள்.

இந்த ரகசிய கேமராக்களை கண்டுபிடிப்பது எப்படி என்பதைப் பற்றி விரிவாக இங்கு காண்போம்...



உடை மாற்றும் அறையில் உள்ள ரகசிய  கேமராவை கண்டறிவது எப்படி?

1. அறைக்குள் நுழைவதற்கு முன் உங்கள் செல்போனிலிருந்து கால் செய்ய முடிகிறதா.?என்பதை உருதிப்படுத்திக்கொள்ளவும்..

2.பின்னர் அறைக்குள் சென்றவுடன் மீண்டும் உங்கள் செல்போனிலிருந்து கால் செய்து பார்க்கவும் .

3.பலமுறை முயற்சித்தும் உங்களால் கால் செய்ய முடியாவிட்டால் நிச்சயம் அங்கே ரகசிய  கேமரா வைகப்பட்டிருகிறது..

எப்படி என்றால்

4..கண்ணாடி இழை கேபிள் (fiber optic cable)வழியாகத்தான் ரகசிய  கேமராக்கள் இணைக்கப்பட்டிருக்கும்.இந்த கண்ணாடி இழை கேபிள் குறுக்கீடுகாரணமாக உங்களுடைய  செல்போன் சமிக்ஞை(signal transfer) பரிமாற்றங்கள் தடை செய்யப்படுவதே நீங்கள் கால் செய்ய முடியாதற்க்கு காரணம்.

ஹோட்டல் அறைக்குள் நுழைந்ததும் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்து விட்டு, அறை முழுவதையும் செல்போனில் வீடியோ எடுங்கள். பின்னர் அதை ஓடவிட்டுப் பாருங்கள். எந்த இடத்திலாவது சிவப்பு அல்லது வெள்ளை நிற ஒளி வந்தால் கேமரா இருக்கிறது என்று அர்த்தம்.

செல்போனில் யாரிடமாவது பேசியபடியே அறை முழுவதும் மெதுவாக நடந்து செல்லுங்கள். திடீரென இரைச்சல் சத்தம் கேட்டால், அருகே ரகசிய கேமரா போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் இருக்கிறது என்று உணர்ந்துகொள்ளலாம்.

ரகசிய கேமரா மட்டு மின்றி, முகம் பார்க்கும் கண்ணாடி யால் கூட வில்லங்கம் ஏற்பட லாம். பொது வாக உயர் அளவிலான போலீஸ் விசாரணை, ஆட்களை அடையா ளம் காட்டுதல் போன்றவற்றுக்கு ‘டூ வே’ (இருபக்க) கண்ணாடி பயன்படுத்தப்படும். அதாவது, முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடிதான். ஆனால், அதன் பின்னால் இருந்துகொண்டு இங்கு நடப்பதை பார்க்க முடியும். அவர்கள் இருப்பது இங்கிருந்து தெரியாது. லாட்ஜ்கள், ஜவுளிக் கடைகளில் இருப்பது இத்தகைய கண்ணாடி இல்லை என்பதை உறுதிசெய்துகொள்வது அவசியம்.


டூ வே கண்ணாடியை கண்டறிவது எப்படி?

பொது இடங்களில் நாம் பயன்படுத்தும் கழிப்பறைகள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள், உடை மாற்று அறைகள் போன்ற இடங்களில் வைக்கப்படிருக்கும் கண்ணாடிகள் மூலம் நாம் நம்மை மட்டுமே  பார்க்க இயலும் என்று நினைத்தால் அது தவறு.நமக்கு தெரியாமலே எதிரில் இருந்து வேறொருவர் நம்மை பார்க்க வாய்ப்புள்ளது.அப்படி அவர் நம்மை பார்ப்பது நமக்கு தெரியாது.மாறாக நமக்கு நம் பிம்பம் மட்டுமே பிரதிபலிக்கப்படும்.சரி இதனை எப்படி கண்டறிவது..???

1.உங்கள் கை விரலின் நகத்தினை எதிரே இருக்கும் கண்ணாடியின் மீது வைக்கவும். அவ்வாறு வைக்கும்போது உங்கள் கை விரலின் நகத்திற்கும்,கண்ணாடியில் தெரியும் பிம்பத்தின்  நகத்திற்கும் இடையே ஒரு சிறிய இடைவெளி இருந்தால் அது ஒரு வழியாக மட்டுமே பார்க்க இயலும் கண்ணாடி.எதிர்புறம் இருந்து யாராலும் பார்க்க இயலாது.

2.மாறாக உங்கள் கை விரலின் நகத்திற்கும்,கண்ணாடியில் தெரியும் பிம்பத்தின் நகத்திற்கும் இடையே இடைவெளி இல்லாமல் இரண்டும்(நகங்கள்) ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டால் சந்தேகமே வேண்டாம்,நிச்சயம் அது ஒரு  2 வழி ஆடி கண்ணாடி என்பது உறுதி.எதிர்புறம் இருந்து யார் வேண்டுமானாலும் பார்க்க இயலும்.

3.இதற்கு காரணம் ஒரு வழியாக மட்டுமே பார்க்கக்கூடிய ஒருவழி ஆடி கண்ணாடிகளில் சில்வர்  முலாம் (வெள்ளி முலாம்) பின்புறம் பூசப்பட்டிருக்கும். இருவழி ஆடி கண்ணாடிகளில் சில்வர்  முலாம் (வெள்ளி முலாம்) கண்ணாடிகளின் மேற்பரப்பில்  பூசப்பட்டிருக்கும்.. எனவே பொதுஇடங்களில் கண்ணாடிகள் கொண்ட அறைகளை பயன்படுத்தும்போது இந்த விரல் சோதனை மிக மிக அவசியம் என்பதை நினைவில் கொள்க..!!!

வழக்கத்தைவிட உங்கள் அறையில் விளக்கு வெளிச்சம் அதிகமாக, கண்ணை கூசும் அளவில் இருந்தால், அங்கு இருப்பது இருபக்க கண்ணாடி யாக இருக்க வாய்ப்பு அதிகம். ஏனென்றால், மங்கலான வெளிச் சத்தில் இத்தகைய கண்ணாடி வழியாக தெளிவாக ஊடுருவிப் பார்க்க முடியாது.

விளக்குகளை அணைத்துவிட்டு கண்ணாடி மீது டார்ச் அடித்துப் பார்த்தால், பின்னால் ஏதேனும் இருக்கிறதா என்பதை அறியலாம். கருப்பு பிலிம் ஒட்டப்பட்ட காருக்குள் பார்ப்பதுபோல, இரு கைகளையும் அணைத்து வைத்தபடி கண்ணாடியோடு முகத்தை ஒட்டிக்கொண்டு பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியும்.

இதுபோன்ற ரகசிய கேமராக்கள், அகச்சிவப்பு கேமராக்களைக்கூட கண்டுபிடிக்கக்கூடிய கருவிகளும் சந்தையில் கிடைக்கின்றன.

உங்கள் சகோதரிகள், மனைவி, மகள்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் ஆகியோரிடம் இந்த செய்தியை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்..!!!! ஏனென்றால் விழிப்புணர்வு ஒன்றே ஆபத்தில் இருந்து தப்பிக்கும் எளிய வழி..

Post a Comment

 
Top